2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சுன்னாகத்தில் பொலிஸ் ஜீப் மீது கல்வீச்சு தாக்குதல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரின் ஜீப் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற வேளையில் இனந்தெரியாத நபர்களினால் பொலிஸார் சென்ற ஜீப் வண்டியின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதி தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, ஆனாலும் சுன்னாகம் பொலிஸ் சார்ஜன்ட்ஸ் தமது பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி சென்றுள்ளனர்.

வேறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் அனுமதியின்றி செல்வது தவறென்று தெரியாமல் பொலிஸார் சென்றுள்ளனர்.   அதேவேளை, பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் சம்பவத்தினை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் எவரையும் கைதுசெய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .