2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். பல்கலை நாளை ஆரம்பம்

Super User   / 2013 ஜனவரி 07 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே நாளை 8ஆம் திகதி முதல் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக நான்கு மாணவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .