2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'யாழ். புகையிரதப்பாதை புனரமைப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவுபெறும்'

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி

யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் நிறைவுபெறும் என்று இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தெரிவித்தார்.

யாழில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  தண்டவாளங்களுக்கிடையில் இடைவெளியில்லாமல் மிகவும் உயர்த்தொழில்நுட்ப முறையில் அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

யாழிற்கான புகையிரதப்பாதையில் நாவற்குழியிலும், ஆனையிறவுப் பகுதியிலும் பாலங்கள் அமைக்கவேண்டியுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு பணியின் இரண்டு கட்டம் நிறைவுபெற்று விட்டது.

பாலாலி விமானத்தளத்தின் 850 மீற்றர் ஓடுபாதை இந்திய அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 500 மீற்றர் பாதை புனரமைக்கப்படுமாயின் பெரிய விமானங்கள் வந்து செல்க்ககூடிய வாய்ப்பு ஏற்படும்.

பல்கலைக்கழக விடயத்தில் நாம் மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.  அவற்றினை வெளியில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. நாம் என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறதை வெளியில் சொல்ல மாட்டோம்.

அதற்கான நடவடிக்கைகள் எந்தமுறையில் செய்ய வேண்டுமோ அந்த முறையில் செய்வோம். இந்திய அரசாங்கத்திற்கு என ஒரு தனித்துவம் இருக்கின்றது. அந்த தனித்துவத்தின் மூலம் செய்ய வேண்டியவற்றினை சரியாக செய்வோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .