2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில். காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் சட்ட முறைகளை வர்த்தகர்கள் கடைப்பிடிக்க தவறுவதுடன், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது' என்று யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

'யாழ். நகரப்பகுதி வர்த்தக நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்ட வேளையில், 18 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகாமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது' என்றும் அவர் கூறினார்.

யாழ். நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 1 இலட்சத்தி 17 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 13 வர்த்தகர்களுக்கு ரூ.76 ஆயிரம் தண்டமும், 5 வர்த்தகர்களுக்கு ரூ. 41 ஆயிரம் தண்டமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .