2025 ஜூன் 18, புதன்கிழமை

சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான செயலமர்வு ஒன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கை பெண்கள் பணியகத்தினால் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.

மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனராசா தலைமையில்  நடைபெற்ற இந்த செயலமர்வில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பெண்களின் உரிமைகள் மீறப்படுதல், இதனை எவ்வாறு தடுப்பது, அதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .