2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சீன உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். நூலக உசாத்துணைபிரிவு கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 27 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



எஸ்.கே.பிரசாத்,-சுமித்தி தங்கராசா

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் கையளித்துள்ளனர்.

யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் யாழ். பொதுநூலகத்தில் இன்று புதன்கிழமை இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இந்த புனரமைப்பு பணிகளை சீன அரசாங்கத்தின் பொறியியல் பிரிவு நேரடியாக மேற்கொண்டிருந்தது. யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணை பகுதியை புனரமைப்பதற்காக 20 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் செயலாளர் கியூ  ஸியூபிங்,  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் உசாத்துணைப்பகுதியை புனரமைத்து முடித்தமைக்கான ஆவணத்தையும் கையளித்தார்.

மேலும், யாழ். மாநகரசபையின் நினைவுச்சின்னத்தை சீன அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் கியூ ஸியூபிங்கிற்கு  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கினார்.









You May Also Like

  Comments - 0

  • juma Wednesday, 27 March 2013 02:45 PM

    அறிவிப்புப்பலகையில் தமிழ் காணோம்!

    Reply : 0       0

    sutha Saturday, 30 March 2013 02:34 PM

    thank you very much china, welcome to Jaffna.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .