2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வட மாகாணத்தின் குடிசன பரம்பலை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சி: சுரேஷ்

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'வட மாகாணத்தின் குடிசன பரம்பலை மாற்றியமைக்க முயல்வதுடன், கலாசார முகத்தினையும் மாற்றி அமைக்க இலங்கை அரசு முயற்சிக்கின்றதாக' தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கை அரசு மாகாணத்தின் முகத்தினை மாற்றும் நடவடிக்கையினை முன்வரமாக நடத்தி வருகின்றது. அதன் நடவடிக்கையினை தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்நடவடிக்கை மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 அல்லது 4 பிரதேசங்களில் 800 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகளை அழித்து இவற்றினை 18 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்க வேண்டுமெனவும், அதேசமயம் சிங்கள குடியேற்றங்களை மாத்திரம் அதாவது, மீனவ, விவசாயம் குடுமப்ங்களாக இருந்தாலும் சரி, குடியேற்றப்படுவதன் மூலம் குடிசன பரம்பல் மாற்றியமைக்கப்படுகின்றது' என்றார்.

'தமிழ் மண் என்ற பெயர் மாற்றப்பட்டு, அங்கு பௌத்த தலங்களும் ஏனைய மதத் தலங்களும் பௌத்த கலாசார விடயங்களை கொண்டு வருவதன் மூலம் அது தமிழ் பிரதேசம் அல்ல என்பதனை கொண்டு வருவதற்கான முயற்சியும் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இனப் பிரச்சினை தீர்வு என்று கூறும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதனை தெளிவாக சொல்ல வேண்டும்.

ஒரு பக்கத்தில் இராணுவம் காணிகளை அபகரிப்பது தொடர்பாக நாம் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். அந்த விடயம் முடிவுக்கு வரவில்லை. அந்த விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மக்கள் மீள்குடியமரப்படவில்லை. நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம் அவ்வாறான சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பாக நாம் பல்வேறு பட்ட மாற்றங்களை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது' என்று கூறினார்.

அது மாத்திரமல்லாது, அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவம், அங்குள்ள அரசியல் கட்சிகளோ தொண்டு நிறுவனங்களோ அங்குள்ள மக்களுடன் தாம் விரும்பியவாறு பேச முடியாத சூழல் இல்லாத சூழ்நிலை. அவர்கள் வரவழைக்கப்பட்டு தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஜெனீவா தீர்மானம் கொண்டு வருமுன் இராணுவத்தினர் போராட்டத்தினை முன்நின்று நடத்தினார்கள்.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் செயற்பாடானது சகல அரசியல் நடவடிக்கைகளையும், பேராட்டங்களை ஒழுங்கு செய்வதில் இருந்து, போராட்டங்களை நடாத்துவதிலிருந்துமக்களை அழைத்து வருவதிலிருந்து இராணுவம் நடாத்தி வருகின்றது' என்று சுரேஷ் எம்.பி குறிப்பிட்டார்.

'உலகத்திற்கு சொல்கின்றபொழுது, வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் வேண்டுமென்பது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 'அக்சன் பிளான்' என்ற அரசாங்கம் வழங்கிய அறிக்கையிலும் கூட வட மாகாணத்தில் சிவில் நிர்வாகம் இருக்கின்றது என கொடுத்துள்ளனர்.

ஆனால், மாறாக சிவில் நிர்வாகம் என்பதற்கு அப்பால் சென்று மாறாக அராசங்கத்திற்கு அரசியல் பணிகளை மேற்கொள்பவர்களாகவும், அரசாங்கத்தின் அரசியல் வேலைகளை செய்பவர்களாகவும் இராணுவத்தினர்களின் வேலை, இவ்வாறான பின்புலத்தில் இருந்துதான் நிலையில் தான் வடக்கு மாகாண சபை தேர்தலையும் முன்வைப்பார்களோ வைக்கமாட்டார்களோ முன்வைப்பதாக பேசக்கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ஆகவே, இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வு ஏற்பட வேண்டுக்யிருந்தால் நிச்சயமாக அரசாங்கம் இன்று செய்து கொண்டிருக்கும் இவ்வாறான விடயங்கள் முற்று முழுதாக நிறுத்தப்படவேண்டிய முற்று முழதான நிச்சயமான ஒரு விடயமாக இருக்கின்றது' என்றார்.

'யுத்தம் முடிவடைந்து விட்டது. மக்கள் விரும்பியவாறு வாக்களிக்கின்றார்கள். என்ற அதிகார பகிர்வு தேவையில்லை. என்று கூறியிருந்தார். அதிகார பகிர்வு தேவையில்லை என்றவர் இன்று தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களினால் அதிகாரப் பகிர்வு சீர்குலைந்து விடும்  என்பதற்காக அதிகார பகிர்வு தேவை என கூறுவது ஆகவே இவர்கள் எந்தவித சிந்தனையில் செயற்படுகின்றார்கள் என்பது மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியும் இதே கருத்துக் கூறியிருக்கின்றார்கள். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற எதுவுமே தேஇவில்லை என்பதை அரசாங்கம் இருக்கின்றது என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது. தமிழகத்தில் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தினை பார்க்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாக மாணவர்கள் ஏனையோரின் போராட்டங்கள் அவர்கள் வைத்த கோரிக்கைகள் தான் இன்று சட்டசபையில் அனைத்து கட்சி கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதனைத் ஏற்றுக் கொள்வதா விடுவதா அல்ல முக்கியமான விடயம்.  ஆனால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்.அதற்கான சர்வ சன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற கோரிக்கை பல மடங்கு வருவதையும் நாங்கள் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

ஆகவே இலங்கை அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் தான் உலக நாடுகளை பொறுத்தவரையில், போர் குற்றங்களை விசாரிக்க மறுப்பதும், காணாமல் போனோர்களை கண்டு பிடிக்க மறுப்பதும், நடவடிக்கைகளை எடுக்க மறுப்பதும் அல்லது மனித உரிமை மீறல்களையும் அது தொடர்பான விசாரணைகளை செய்ய மறுப்பதும், அப்படியான நடவடிக்கைகள் தான் சர்வதேச ரீதியர்க இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது என்பதை கூட இன்னும் இந்த  அரசாங்கத்திற்கு புரியமால் இருப்பது ஒரு வருந்தத்தக்க விடயம்.
 
ஆகவே இன்று ஒரு தீர்வை நோக்கி இலங்கை அராசங்கம் செல்லாமல் இருக்குமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் இந்த போர் குற்றங்களுக்கும், காணாமல் போனோர்கள் தொடர்பாகவும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் காத்திரமான ஒரு சரியான தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சில விடயங்களை முன்வைக்க தவறும் பட்டசத்தில் இன்னும் நிச்சயமாக இன்னும் இருக்கமாக சர்வதேசத்தினால் முன்வைக்கப்படும்.

இலங்கை  அரசாங்கம் எந்த வித செயற்பாடுகளை முன்வைத்தாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்களும், முக்கியமாக அவ்வாறான விடயங்களை வரவேற்பதை தவிர அவர்களுக்கு வேறு மாற்று வழி இருக்காது என்பதை சொல்லியே ஆக  வைக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் இதுவரையில் கூட எந்த விதமான காத்திரமான முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு 2011 வரை 2012 ஒரு வருடமாக பேசியும் கூட ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் இருப்பதும், அரசாங்கம் 2013 வரை எந்தவித காத்திரமான பேச்சுவார்த்தை நடாத்தாமல் இருப்பதும் வெறுமனவே நாடாளுமன்ற தெரிவுக்குழு என்ற உப்புச்சப்பற்ற விடயங்களை பேசுவதில் எந்தவித பிரச்சினைகளை தீர்காது.

ஒட்டு மொத்தமாக இந்த நாட்டு மக்களின் நலன்களின் அடிப்படையில், தமிழ் மக்களாக இருக்கட்டும், சிங்கள மக்களாக இருக்கட்டும் முஸ்லீம் மக்களாக இருக்கட்டும், மேற்சொன்ன பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயிருந்தால் இலங்கை அரசாங்கம் விடாபிடியான கொள்கைளில் நிற்காது, பௌத்த சிங்கள நாடு என்ற அடிப்படையில், இருந்து கொண்டு போச்சுவர்த்தைகளை அணுகாது ஏனையோரும் இந்த நாட்டு குடி மக்கள், அந்த அடிப்படையில் இந்த விடயங்களை கையாள முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .