2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபை ஊழியர்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்ட மூவரையும்  விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். கொட்டடி மீன் சந்தையில் யாழ். மாநகர சபை ஊழியர்களுக்கும் நாவாந்துறை பகுதி மீனவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நாவாந்துறை மீன் வியாரிகள் 16 பேர் கொண்ட குழுவினரால் யாழ். மாநகர சபை ஊழியர்கள் 5 பேர் வாள்வெட்டிற்கு இலக்கானதுடன் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களை மேற்கொண்ட 16 பேரில் மூவர் யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். இந்த மூன்று பேரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .