2025 ஜூன் 18, புதன்கிழமை

சேதமான வர்த்தக நிலையங்களை புனரமைக்க இந்தியா நிதியுதவி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு இந்தியா 91 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதரம் தெரிவித்துள்ளது.

யாழ். இந்திய துணைத் தூதரகம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் இணையத்தினர் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் யாழ். இந்திய துணைத்  தூதரம் கூறியுள்ளது.

இந்த புனரமைப்புக்காக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 1,230 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காசோலைகள் வழங்கப்படவுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இவர்களுக்குரிய காசோலைகளை வழங்கிவைக்கவுள்ளனர்.

இதற்கான நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் யாழ். இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .