2025 ஜூன் 18, புதன்கிழமை

மாந்தை பிரதேச சபைக்கான அதிகாரங்களை அமைச்சர் றிசாட் பறிக்கின்றார்: தவிசாளர்

Super User   / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


முல்லைத்தீவு, மாந்தை பிரதேச சபைக்கான அதிகாரங்களை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகிய இருவரும் பறிக்கின்றனர் என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அம்;பலவாணர் தனிநாயகம் தெரிவித்தார்.

பிரதேச சபைக்கான அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு பிரதேச சபைக்கென ஒதுக்கப்பட்ட 107 மில்லியன் ரூபா நிதியில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் உதவிகள் பெரிதாக கிடைப்பதில்லை. உள்ளுராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கு தகவல்களுக்கு அனுப்பலாமே தவிர,  அனுமதிக்காக மாவட்ட  ஒருங்கிணைப்பு குழுவிற்கும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிற்கும் அனுப்புவது என்ற நடைமுறை வட மாகாணத்தில் மட்டுமே இருக்கின்றது.

ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதேச சபைகளில் இந்த நடைமுறை இல்லை. திட்டமிட்டு குழப்புகின்றார்கள். அத்துடன், இங்கு வழங்கப்படும் நிதிகளை வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியை தான் அங்கு இருக்கின்றவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காணி பகிர்ந்தளிப்பு விடயங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விகிதாசாரத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றம் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மக்கள் முன்னெடுக்கவில்லை. அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், அரசியல் நோக்கோடு முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்து அதனூடாக தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றி அமைக்க கூடிய விடயத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவ்வாறான விடயங்களுக்கு நாங்களும் ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு முடியுமான அளவு உதவிகளை வழங்கி வருகின்றோம். இதில், முக்கியமான விடயம் என்னவென்றால் வளப்பங்கீடுகள் பகிர்ந்தளிப்பதற்கான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியள்ளாhர்கள். இதனூடாக திட்டமிட்ட சதி வேலை என்றே சந்தேகிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

2010 மீள்குடியேற்றம் செய்யப்படும் பொழுது மின்சாரம் எந்த இடத்தில் இருந்ததோ அந்த இடத்தில் இருந்து 1 இஞ்சி கூட நகரவில்லை. வட மாகாண சபையின் ஒத்துழைப்புக்கள் இன்மை, துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் இல்லை. வட மாகாண சபையிடம் துறைசார்ந்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு கேட்டபோதும், நியமிக்கப்படவில்லை. பரிசீலனைகள் மேற்கொள்வதாக கூறுகிறார்கள். ஏனைய வளங்கள் இன்றியும் வாழ்கின்றார்கள்.

பல்வேறு திணைக்கள அதிகாரிகளிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் மக்கள் பெரும் விரக்தியின் மத்தியில் வாழ்கின்றார்கள்.அத்துடன், முல்லைத்தீவு பகுதி மக்களின் கணிசமான வளங்கள் அநுராதபுரம் மாவட்டத்துடன் இருந்த வெலி ஓயா என்ற சிங்கள பிரதேசத்தின் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. முல்லை மாவட்ட உணவுத்திட்டம் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

மிகவும் ஒரு சிக்கலான காலகட்டத்தில் இருப்பதோடு, மிகவும் ஒரு திட்டமிட்ட தமிழ் மக்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமன்றி அந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார நிலமைகளும் மழுங்கடிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலைகளும் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் மாகாண சபை கூடுதலாக பங்களிப்பு வழங்கி வருகின்றதென்பதனையும் சுட்டிக் காட்டினார்கள்" என்றார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சிவலோகநாதன் செந்தூரன் உட்பட வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • sajith Wednesday, 17 April 2013 03:37 PM

    மாந்தை கிழக்கு தவிசாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மநாடு நடத்தியுள்ளார். வடமாகாண சபை என்பது அரசாங்கத்தின் ஆளுநரினால் தான் இயங்குகின்றது. முல்லைத்தீவுக்கு தேவையான நிதியினையும் வேலைத்திட்டங்களையும் அமைச்சர் றிசாத் தான் ஒதுக்கீடு செய்துவருகின்றார்.
    அய்யோ தவிசாளரே பொருத்தமில்லாத கதையினை சொல்லுறீங்களே, ஏனைய மாவட்டத்திலும் அபிவிருத்தி குழுக்கள் இருக்கின்றன. பிரதேச அபிவிருத்தி குழுக்கள் இருக்கின்றது. உங்களுக்கு தெரியாதா?

    Reply : 0       0

    நாசமறுப்பான் Thursday, 18 April 2013 01:58 AM

    அன்புள்ள மாந்தை பிரதேச சபை தவிசாளர் ஐயா அவர்களுக்கு. பிரதேச சபைச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ரிசாத்தும் ஹுனைஸ் பாரூக்கும் பறித்தெடுத்துள்ளார்கள் என்பதை தெளிவாகக் குறிப்பிட முடியுமா? என தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .