2025 ஜூன் 18, புதன்கிழமை

குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

நல்லூர் அடையாளி வீதியைச் சேர்ந்த கணேஸ் மகேந்திரன் (வயது 52) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரியாலைக்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

சென்றவரை இதுவரையில் காணவில்லை என நேற்று இரவு 11.00 மணியளவில் காணாமல் போனவரின் மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .