2025 ஜூன் 18, புதன்கிழமை

சட்டவிரோத மணல் மணல் அகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும்: சந்திரகுமார் எம்.பி.

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
, சிவகருணாகரன், சுமித்தி தங்கராசா

'கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டத்திற்கு புறம்பான மணல் அகழ்வுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்ற நடைபெற்ற மணல் அகல்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

'கிளிநொச்சி மாவட்டம் இன்றைய சுழலில் உட்கட்டுமானச் செயற்திட்டங்களை அதிகமாகக் கொண்ட மாவட்டமாகக் காணப்படுவதோடு மக்களுக்கான வீட்டு வசதிகளை துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்ததைக் கொண்ட மாவட்டமாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில் இம்மாவட்டத்தினுள் பெறப்படும் மணல் வளம் இங்கேயே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் வேறு எந்த மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படாத மணல் விநியோக நடைமுறையினை கிளிநொச்சி மாவட்டத்தில் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அதாவது கட்டுமானத்தேவைக்கான மணல் விநியோகத்தினை கிராமமட்ட அமைப்புக்களிடம் நாம் ஒப்படைத்திருந்தோம்.

இதன்நோக்கம் முழுமையாக மக்களின் நலன் சார்ந்ததே தவிர கிராம அபிவிருத்திச் சங்கங்களின் நலன்களை இலக்காக கொண்டிருக்கவில்லை.

ஆகவே இன்று வரையான மணல் விநியோக செயற்பாடுகளின்போது மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது' என்று தெரிவித்தார்.

கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் செயற்படும் கிராம அபிவிருத்திச் சங்கங்களில் மணல் விநியோகத்திற்கு பொறுப்பாக செயற்படும் உறுப்பினர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்ததோடு குறித்த கிராமங்களின் கிராமசேவையாளர்களிடமும் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .