2025 ஜூன் 18, புதன்கிழமை

காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கே 'மண்ணின் மகிமை' திட்டம்: சந்திரகுமார் எம்.பி

Super User   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடக்கில் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மண்ணினி மகிமை திட்டம் சிறந்த திட்டமாகும் என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக மக்களின் காணி பிணக்குகள் தொடர்பில் சீரான எவ்வித நடவடிக்கைகளும் காணப்படவில்லை இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இத்திட்டம்  அறிமுக்கப்படுத்தப்பட்;டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் ஊற்றுப்புலம் கிராமத்தில் மண்ணின் மகிமை திட்டத்த்pன் கீழான  நடவடிக்கைகள் ஆரம்பித்து  மக்களுக்கான காணி ஆவணம் வழங்கிவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"வடக்கில் முதல் முறையாக கிளிநொச்சி மாவட்டத்திலேயே மண்ணின் மகிமை திட்டத்தின் கீழ் ஊற்றுப்புலம் கிராமத்திற்கான காணி ஆவணங்கள் வழங்கப்படுகிறன. இம் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அதிகளவு காணி பிணக்குகளே காணப்படுகிறன. அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினர்களும் இந்த காணிப்பிணக்குகளை தீர்ப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் தான் மண்ணின் மகிமை திட்டம் இங்கு நிலவுகின்ற காணிப்பிணக்குகளுக்கு இலகுவாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வழிவகுத்திருக்கிறன.'மண்ணின் மகிமை' திட்டத்தின் பயனை பாதிக்கப்பட்டுள்ள எமது மக்கள் இன்னும் ஒரு வருடங்களுக்கு முன்னரே பெற்றுக்கொள்ள கூடிய நிலை இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த திட்டத்திற்கு ஏதிராக வழக்கு தாக்கல் செய்யதமையினால் மண்ணின் மகிமை திட்டத்தின் பயனை மக்கள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்;படுத்தப்பட்டது. இருப்பினும் அதிலுள்ள சட்டச்சிக்கல்களை தீர்த்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் பயனை மக்கள் இன்று பெற்றுக்கொள்ள கூடிய நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊற்றுப்பலம் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் நாம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம். தற்போதும் கூட இங்குள்ள ஆறு உள்ளக வீதிகள் உள்ளிட்டவையை புனரமைக்க சில திட்டங்களுக்கு ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இக்கிராம மக்களின் முக்கிய கோரிக்கையான இரண்டு குடியிருப்புக்களையும் இணைக்கும் பாலத்தினை அமைத்தலாகும்  அதற்காக 120 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது இந்தப்பணியும் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த 59 குடும்பங்களுக்கு முதற் தடவையாக காணி ஆவணம் வழங்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர்  முருகேசு சந்திரகுமாரின்  2012 பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒலி பெருக்கி தொகுதிகள் கையளிக்கப்பட்டதோடு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பெறப்பட்ட தறப்பாள் கூடாரங்களும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், பிரதேச செயலாக காணி உத்தியோகத்தர் சிவகுமார், ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிராம அலுவலர் சிவனேசன், மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .