2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 20 பரப்பு காணியினை விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக  நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார்; தெரிவித்தார்.

திருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள காணியையே விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், இந்த விளையாட்டு மைதானம் சுமார் ஒரு மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விளையாட்டு மைதானத்தில், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்கள் பயன்படுத்த கூடியவகையிலும், விளையாட்டு கழகங்களிடையே  விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவும் புனரமைக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X