2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். உயர்பாதுகாப்பு வலயத்துக்கு செல்ல ஐ.தே.க.வினருக்கு இராணுவம் அனுமதி மறுப்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், ஜெகநாதன்


யாழ். உயர் பாதுகாப்பு வலயத்துக்கு செல்ல முற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டக் குழுவினர், இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரே இவ்வாறு இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்திலிருந்து கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட 6,500 ஏக்கர் நிலப்பரப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ரணில் தலைமையிலான குழுவினர் உயர் பாதுகாப்பு வலயத்துக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இராணுவத்தினரால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐ.தே.க.வின் இந்த உயர்மட்டக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • vallarasu Thursday, 25 April 2013 03:35 PM

    இப்போ உலக நாடுகளுக்கு புரியுமே வடக்கில் என்ன நடக்கிறது என்று...

    Reply : 0       0

    abu nana Friday, 26 April 2013 03:58 AM

    அரசு பயந்து விட்டது. விசயம் அம்பலம் ஆகும் என்று...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .