2025 ஜூன் 18, புதன்கிழமை

ஐ.தே.க.வுடன் இணையுமாறு யாழ். மக்களுக்கு ரணில் அழைப்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாண மக்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அங்கத்துவப் படிவம், யாழ் மக்களிடையே இன்று வெள்ளிக்கிமை விநியோகிக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் யாழ். பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, பொதுமக்களிடம் சென்று இந்த படிவத்தினை விநியோகம் செய்தது.
 
அத்துடன், யாழ் பேரூந்து நிலையத்திற்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்த இளைஞர் யுவதிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியில் அணைந்துகொண்டு கட்சியைப் பலப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

பெருமளவான பொதுமக்கள், இளைஞர், யுவதிகள் இந்த அங்கத்துவப் படிவத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, சுவாமிநாதன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • vallarasu Saturday, 27 April 2013 07:38 AM

    ஐய்யா... ஐதே கட்சியில் சேர்வது பிரச்சினை இல்லை. அதில் நீங்கள் தலைவராக இருப்பதுதான் பிரச்சினை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .