2025 ஜூன் 18, புதன்கிழமை

மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யுத்தத்தால் அழிவடைந்து தற்போது புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நேற்று வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வையிட்டார்.

நேற்று மாலை 3.30 மணிக்கு அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் புதிய கட்டிடத்தொகுதியைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன் யாழ் மல்லாகத்தில் உள்ள தற்போதைய நீதிமன்றத்தில் யாட் மாவட்ட சட்டத்தரணிகளுடன்  சந்தித்து நீதிமன்றங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் மல்லாகம் நீதிமனற்த்திற்கே வருவதாகவும் 8 மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் இந்த நீதிமன்றத்தின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் பொலிஸார் சாதாரணமாக தீர்த்து வைக்க கூடிய பிரச்சனைகளையும் நீதிமன்றத்திற்கே அனுப்பிவிடுகின்றனர். குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் கூட நீதிமன்றத்திற்கு பொலிஸாரால் அனுப்பிவைக்கப்படுகின்றனர் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாலாலி மற்றும் காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் இருந்து வரும் வழக்குகள் பெருமளவானவை இராணுவத்துடன் சம்மந்தமாக இருப்பதால் இதனைக் அணுகுவது சிரமமாக இருப்பதாகவும் அமைச்சரிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .