2025 ஜூன் 18, புதன்கிழமை

வட மாகாண தேர்தலில் சரியானவர்கள் தெரிவானால் பலாலியில் மீள்குடியேற்றம் உறுதி: அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2013 மே 07 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

"வட மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்தால் ஜனாதிபதியின் ஆசியுடன் பலாலியில் மக்களை மீளக்குடியேற்றுவோம்" என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

குருநகரில் வலைத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

"வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னமும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி தீர்மானிக்கவில்லை. வடக்கின் தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய ஜனநாயக சூழலில் யாரும்  கருத்துக்களை தெரிவிக்க முடியும். எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் எமது கடந்த காலத் தலைமைகள் வீணடித்துவிட்டனர்" என்றார்.

"இன்று கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் சரிவரப் பயன்படுத்தி எமக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களுக்கு ஆணையினை வழங்கினால் ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் பாலாலியில் மக்களை மீள்குடியேற்வோம்" என்றார்.

"அத்துடன், காணி ஆதிகாரம் மாகாண சபைகளுக்குகே உரியது. அதனை நடைமுறைப்படுத்துகின்ற செயன்முறைகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று காணி தொடர்பான பிரச்சினைகள் வந்திருக்காது என்றும் இனியும் சரியான நடைமுறைச் சாத்தியமான சரியான பாதையை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • fawaz Tuesday, 07 May 2013 05:06 AM

    ரொம்ப நல்லம் சேர்! இந்த சேவையை தேர்தலுக்கு முன்னாடி செய்துவிட்டு வோட்டு கேக்கலாம் தானே? உங்களுக்கெல்லாம் எப்பதான் ஆண்டவன் அருள் கிடைக்குமோ…

    Reply : 0       0

    subme Tuesday, 07 May 2013 08:50 AM

    ஏமாளிகள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .