2025 ஜூன் 18, புதன்கிழமை

சீ.வி.கே.சிவஞானத்தின் வீட்டின் மீது கல்வீச்சு

Menaka Mookandi   / 2013 மே 08 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா


தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் வீட்டிற்கு இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு, முத்திரைச் சந்தி வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நடத்தப்படும் போது, அவர் கணணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதன்போது வீட்டின் ஒடுகளின் மேல் சரமாறியாக கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மரத்தில் இருந்து ஏதோ விழுகின்றது என நினைத்து பொருட்படுத்தாது விட்டவேளை, பை ஓன்றில் கற்கள் கட்டப்பட்ட நிலையில், ஜன்னல் கண்ணாடிக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஜன்னல் கண்ணா உடைந்து சிதறியதில் அவரின் மூக்கில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் போது, அவர் கூச்சலிட்ட வேளை, அயலவர்கள் வெளியில் வந்த போது, தாக்குதல் மேற்கொண்டவர்கள் ஓடிச் சென்றுள்ளனர். மாகாண சபை தேர்தலில் தமிழரசு கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே நேற்று இரவு இக்கல் வீச்சு தாக்குதல் இடமபெற்றுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சியின் துணைச்செயலாளர் சீ.வி.கே சிவஞானத்தின் வீடு யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதுடன்  இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .