2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வித்தகபுரத்தில் நாய்க்கடி அச்சுறுத்தல்

Super User   / 2013 மே 08 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி வடக்கு, வித்தகபுரம் பகுதியில் நாய் கடிக்கு பலர் உள்ளாகி வருகின்றனர். இது பொதுமக்களால் பிரதேச சபை மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வித்தகபுரம் பகுதியில் பலர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ள நிலையில், அவ்வாறு அங்குள்ள மக்களைக் கடித்துவரும் நாய் ஒன்று அண்மையில் இறந்துள்ளது. இவ்வாறு இறந்த நாயின் கழுத்து வெட்டப்பட்டு தெல்லிப்பளை சுகாதராப் பிரிவு அதிகாரிகளினால் பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாயக்கிழமை முழுவதும் வித்தகபும் மற்றும் அதனை சுற்றிய அயல் பகுதிகளில் நாய்கடி சம்பந்தமான விழிப்புணர்வு  செயல்பாடுகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்களையும் வழங்கியுள்ளார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X