2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாக்குகளுக்காக இனவாதத்தை கக்குகின்றனர்: ஜெயப்பிரியன்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அந்த மக்களின் பிரச்சினைகளை குறித்து ஆராயாமல் அரசியல் வாதிகள் இனவாதக் கருத்துகளையே கக்குகின்றனர் என்று; வடமாகாணசபையின் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் வீரராஜன் ஜெயப்பிரியன் தெரிவித்தார்.

சிங்கள அரசியல் வாதிகள் மட்டுமல்ல தமிழ் அரசியல் வாதிகளும் இனவாதக் கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து தமது வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்வதற்கு முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத கருத்துக்களை பரப்புவதன் மூலமாக எதிர் காலத்தில் கூட அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அக்கட்சி மக்களின் ஐக்கியத்துக்காகவே செயற்படுகின்றது.

தென்னிலங்கை மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் குரல் கொடுக்கின்றது. வடக்கு மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் முன்னின்று அதனைத் தட்டிக் கேட்கின்றது. இப்போதுள்ள சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுதான் பொருத்தமான ஒன்றாகும்.

இனங்களுக்கிடையிலான விரோதம் தான் இதுவரை காலமும் ஏற்பட்ட இழப்புக்கள் அனைத்துக்கும் பிரதான காரணமாக அமைந்தது என்பதனை எவரும் மறந்துவிடமுடியாது.

இன ஒற்றுமையுடன் செயற்பட்டால் இயன்றவரை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் சிறந்ததாக அமைகின்றன. இதனை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளார்கள். எனவே, வடக்கு மக்களும் இதனை உணர்ந்து எமக்கு வாக்களிப்பார்கள். யுத்தத்தின் பிடியில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் பிரச்சினைகளை தேடியறிந்து அவற்றுக்கு தீர்வு காணவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்று பல கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் துன்பங்களுக்கு முடிவென்பது இன்றும் தொடர்புள்ளியாகவே காணப்படுகின்றது. எனவே, மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பி நிற்கின்றார்கள் அதற்காக கட்சி பேதங்களைப் பார்க்காது என்னைப்போன்ற இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • ragu Tuesday, 17 September 2013 07:54 AM

    இவ்வாறான இளைஞர்கள்தான் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் சூழலுக்குத் தேவை....

    Reply : 0       0

    பரசரியசய.ே Tuesday, 17 September 2013 07:58 AM

    அதுக்காக என்னத்த வேணாலும் கக்குவாங்கள்.. யாரவேணாலும் விப்பாங்கள்...

    Reply : 0       0

    guruparan Tuesday, 17 September 2013 07:59 AM

    அதுக்காக என்னத்த வேணாலும் கக்குவாங்கள்.. யாரவேணாலும் விப்பாங்கள்...

    Reply : 0       0

    MEGNA Tuesday, 17 September 2013 09:50 AM

    ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அக்கட்சி மக்களின் ஐக்கியத்துக்காகவே செயற்படுகின்றது. ஸூப்பர்

    Reply : 0       0

    kumaar Tuesday, 17 September 2013 04:39 PM

    ரொம்ப முக்கியம்....

    Reply : 0       0

    darshan Tuesday, 17 September 2013 04:46 PM

    அப்படியா .....யானை என்ன செய்ய போகுது...?

    Reply : 0       0

    Steve Tuesday, 17 September 2013 04:48 PM

    நாளைய அரசியலுக்கு இன்றைய இளைய சமுதாயமே ஒரே வழி என்பதற்கு தம்பி ஜெயப்ரியன் போன்றோர் வேண்டும்.... தடுமாற்றம் வேண்டாம்....

    Reply : 0       0

    yasi Tuesday, 17 September 2013 05:02 PM

    அரசியலுக்கு வரும் அனைவரும் சொல்லும் கருத்து தான் இது. தனது சுயனலத்திட்காக செயட்படாமல் மக்களுக்காக சேவை செய்தால் வரவேற்கத்தக்கது ..

    Reply : 0       0

    yasi Tuesday, 17 September 2013 05:06 PM

    அரசியலுக்கு வரும் அனைவரும் சொல்லும் கருத்துத் தான் இவை. தனது சுயனலத்துக்காக செயற்படாமல் மக்கள் நலனுக்காக செயற்பட்டால் நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .