2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நயினாதீவு – குறிகட்டுவானுக்கான படகுப்பாதை போக்குவரத்து ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். நயினாதீவுக்கும்; குறிகட்டுவானுக்கும் இடையிலான முதலாவது படகுப் பாதை போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வீதி  அபிவிருத்தி அதிகார சபையினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், 61.141 மில்லியன் ரூபா செலவில் இந்த படகுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகுப் பாதையில்  வாகனங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,  வடமாகாண  ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .