2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்காமையால் சுரேஸ் எம்.பி. குழப்பம் ஏற்படுத்துகிறார்: சி.வி

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பிரியந்த ஹேவகே, பிரதீப் குமார, சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


'நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை (11) வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்தே இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார்.

வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறத்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், 'நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்.

இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினையே. இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்று கூறினார்.





You May Also Like

  Comments - 0

  • Sumathy m Friday, 11 October 2013 01:17 PM

    ஐயா விக்னேஸ்வரன் அவர்களே! மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள். சுரேஷ் பிரேமச்சந்திரனின் பிரச்சினை முல்லைத்தீவில் கஷ்டப்படும் மக்கள் பற்றியதல்ல. முல்லைத்தீவில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பது வெறும் புலுடா. தனது தம்பிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பது தான் இவரது பிரச்சினை. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்துவிட்டீர்கள். கவனமாக செயற்படுங்கள். மக்களுக்கு கஷ்டத்தையும் வலியையும் ஏற்படுத்தியவர்கள் எல்லாம் மக்களின் வலி பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கே தண்ணி காட்டிய சுரேஷுக்கு, ஐங்கரநேசன் தண்ணி காட்டி விட்டார்!

    Reply : 0       0

    KB Saturday, 12 October 2013 12:26 AM

    தமிழன் வாரிசு அரசியலை விரும்புவனல்ல என்பது வரலாறு. அதனைத் திணிக்கவேண்டாம் என்றும் சுரேஷிடம் தயவுசெய்து சொல்லுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .