2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் இருவர் சத்தியப்பிரமாணம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை இருவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மாகாணசபை உறுப்பினர்களாக ஈ.பி.எல்.ஆர்.எவ் சேர்ந்த துரைராஜா ரவிகரன், ரெலோ அமைப்பினைச் சேர்ந்த ஞானசீலன் குணசீலன் ஆகிய இருவரே கொழும்பிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய சத்தியப்பிரமாண நிகழ்வினை புறக்கணித்திருந்த 9 உறுப்பினர்களில், ரெலோ அமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்காலிலும் புளொட் அமைப்பைச் சேர்ந்த த.சித்தார்த்தன் மற்றும் த.லிங்கநாதன் ஆகியோர் வட்டுக்கோடையிலும் மேலும் இருவர் முதலமைச்சர் முன்னிலையிலும் சத்தியப்பிராமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .