2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கடை உடைத்து திருட்டு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சிறுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கக்கடையொன்றில் பூட்டினை உடைத்து ரூபா 22 ஆயிரத்து 285 பெறுமதியான பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டுள்ளன.

இங்கு வைக்கப்பட்டிருந்த 22 ஆயிரத்து 285 ரூபா பெறுமதியான பால்மா உட்பட ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .