2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இராசாவின் தோட்டப்பகுதியில் வாள்வெட்டு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்.இராசவின் தோட்டம் பகுதியில் வாள்வெட்டுக்கு இழக்காகிய நிலையில் இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த வை.துஷ்யந்தன் (வயது 22) என்பவரே இவ்வாறு வாள்வெட்டு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்று மதியம் 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நபர்களுக்கிடையில்  ஏற்பட்ட தகராறின் காரணமாக இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .