2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

குப்பைக்கு வைத்த தீயினால் தென்னங்கன்றுகள் நாசம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபில்நாத்


யாழ். ஆவரங்கால் பகுதியில் காணி ஒன்றில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீ மூட்டியபோது, அந்தத் தீ அருகுக் காணியிலிருந்த 85 தென்னங்கன்றுகளை எரித்து நாசமாக்கியது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை மதியம் ஆவரங்கால் நவோதய வீதியிலுள்ள காணி உரிமையாளர் ஒருவர், தனது காணியைத்; துப்பரவு செய்து குப்பைகளுக்கு தீ மூட்டி விட்டு மதிய வேளை உணவுக்காக தனது வீடு சென்றுள்ளார்.

இதன்போது குப்பைகளுக்கு மூட்டிய தீ பற்றி எரிந்து அருகுக்  காணியிலிருந்த தென்னங்கன்றுகளையும் எரித்து நாசமாக்கியது.

இந்நிலையில், அப்பிரதேசத்தில்  வீதி அகழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை தண்ணீர் பவுஸர் மூலம் அயலவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்தபோதிலும், அது பலனளிக்கவில்லை.

இது  தொடர்பில் தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டிருந்த காணி உரிமையாளர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .