2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'வடமாகாண சபை அதிகாரங்கள் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்துவோம்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


வடமாகாண சபையின் அதிகாரங்களினூடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென வடமாகாண சபை துணை அவைத்தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு  வியாழக்கிழமை(17) விஜயம்செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தத்தினால் உடல், உள ரீதியாக பெருமளவு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பாதிப்புக்களிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது. இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காகவே மக்கள் வடமாகாண சபை ஊடாக அதிகாரங்களைத் தந்துள்ளனர்.

இந்தப் பொறுப்புக்களை சர்வதேச நாடுகளின் உதவியுடனும் மேம்படுத்துவோம்' என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது, மாந்தை கிழக்குப் பகுதியில் வடமாகாண சபைத் தேர்தல் தினம் அன்று இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்ட வீட்டினை திருத்துவதற்காக முதற்கட்டமாக ரூபா 50 ஆயிரத்தினை அன்ரனி ஜெயநாதன் வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .