2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழில் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் நேற்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

உடுவில் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியை ஒருவருக்கு மாலைபோடச் சென்றுள்ளான்.

இருந்தும் அந்த ஆசிரியை அந்த மாலையினை ஏற்க மறுத்ததுடன், குறிப்பிட்ட மாணவனை தள்ளிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக உடுவில் கோட்டத்திலும், வலிகாமம் கல்வி வலயத்திலும் குறிப்பிட்ட மாணவனின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும், அந்த ஆசிரியைக்கு எதிராக இதுவரையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (22) மேற்படி மாணவனின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் ஆசிரியைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .