2025 ஜூன் 23, திங்கட்கிழமை

டெங்கு நுளம்பு பெருக காரணமாகவிருந்தவருக்கு அபராதம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். ஆவரங்கால் சந்தியிலுள்ள வியாபார நிலைய உரிமையாளர் ஒருவர் டெங்கு நுளம்பு பெருக காரணமாகவிருந்தமையால் மல்லாகம் நீதிமன்றம் 2 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.
 
இது பற்றி தெரிய வருவதாவது,
 
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் ஆவரங்கால் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சிவதர்சன் மற்றும் அச்சுவேலி பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வந்தனர்.
 
ஆவரங்கால் சந்தியிலுள்ள மேற்படி வியாபார நிலையத்தில் டெங்கு பெருகும் அபாய நிலையில் கழிவு நீர்த்தொட்டி காணப்படுவதால் அதனை அகற்றுமாறு சுகாதார பரிசோதகரினால் அறிவுறுத்தல் விடப்பட்டிருந்த போதும், உரிமையாளர் அதனை செயற்படுத்தவில்லை.
 
இதனைத் தொடர்ந்து அச்சுவேலி பொலிஸாரினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (25) மேற்படி வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
மல்லாகம் நீதவான் நீதிபதி உரிமையாளருக்கு ரூபா 2000 ஆயிரம் தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .