2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

மட்டக்களப்பில் காணாமற்போனதாகக் கூறப்பட்டு யாழில் மீட்கப்பட்ட சிறுவன் திங்கட்கிழமை (28) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக யாழ்.சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பெரிய கல்லாறைச் சேர்ந்த இராமநாதன் சானுஜன் என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) காணமற்போயிருந்தார்.

தொடர்;ந்து, கடந்த சனிக்கிழமை (26) யாழ்.பஸ் நிலையத்தில் தனியாக நின்றிருந்த மேற்படி சிறுவனை தென்மராட்சி பிரதேச வலுவூட்டல் ஆலோசனை அதிகாரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் இச்சிறுவன் திங்கட்கிழமை (28); அவனது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .