2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மருதங்கேணியிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். மருதங்கேணி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பணமும்  தங்கநகைகளும் நேற்று திங்கட்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளன.

இவ்வீட்டிலிருந்து 50,000 ரூபா பணமும் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளும்; திருட்டுப்போயுள்ளன.

தமது வீட்டில் திருட்டுப்போயுள்ள விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையிலேயே தெரியவந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, இப்பிரதேசத்திலுள்ள மேலும் 8 வீடுகளில் திருடர்கள் சல்லடை போட்டு தேடியுள்ளனர். இருப்பினும் இவ்வீடுகளில் எதுவும் திருட்டுப்போகவில்லை.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .