2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யுவதியை காணவில்லை என முறைப்பாடு

Super User   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கந்தர்மடம் பகுதியை சேர்ந்த யுவதியை காணவில்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ். பலாலி வீதி கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவரத்தினம் தர்சினி என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.

வீட்டிற்கு முன்பாக உள்ள கடைக்கு சென்று வருவதாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணியளவில் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .