2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு உடையார்கட்டு, குளக்கட்;டு வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் முல்லைத்தீவு உடையார் கட்டு தெற்கு குருவயலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நல்லையா கிருபாகரன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி வீதியில் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த இவரை வான் ஒன்று மோதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வாகனத்தின் சாரதியை  பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .