2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்தவர் பிணையில் விடுதலை

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேற்படி பகுதியில் சுமார் 26 ஆயிரத்து 250 மில்லிலீற்றர் கசிப்பினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணத்தினையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கடந்த திங்கட்கிழமை (04) கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்தனர்.

குறித்த நபரையும் அவரிடமிருந்து கைப்பற்றியதாக கூறப்படும் பொருட்களையும் நேற்று செவ்வாய்கிழமை (05) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, மேற்படி நபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரபிணையிலும் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .