2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி. தபேந்திரன்


ஐக்கிய நாடுகள் சபையின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை (06) காலை கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் தின நிகழ்வையும் முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் ஏ - 9 வீதியில் பயணித்த பயணிகளுக்கு வீதியின் ஒழுங்கினைக் கடைப்பிடிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகத்தர்களினால் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களினால் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செல்லமுத்து ஸ்ரீநிவாசனுக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .