2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். மேல் நீதிமன்றத்தினால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

Super User   / 2013 நவம்பர் 06 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ். மேல் நீதிமன்றினால் இன்று புதன்கிழமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கைதடி மேற்கு பகுதியை சேர்ந்த 37 வயதான கதிரன் லோகேஸ்வரன் என்பவர் போர் ஆயுதப் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கடந்த 2009 மே 15ஆம் திகதி பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைசெய்யப்பட்டவருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தும் நீதிபதி, குறித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை சட்டத்தின் தேவைக்கு ஏற்ப பதிவு செய்யப்படவில்லை எனவும் சந்தேகநபர் சுயமாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் தெரிவித்து வாக்குமூலத்தை நிராகரித்தார்.

இதனை ஒரு சான்றாக கருதமுடியாது என நீதிபதி தெரிவித்ததுடன் இந்த வழக்கினை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்த நபருக்கு எதிராக இதே குற்றச்சாட்டில் வவுனியாவிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .