2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்தியத் துணை தூதரகத்தினால் வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கௌரவிப்பு

Super User   / 2013 நவம்பர் 06 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இந்தியத் துணைத் தூதுவர் வே. மாகலிங்கத்தினால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

கௌரவிப்பு நிகழ்வினை தொடர்ந்து இந்தியத் துணைத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் கமலேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

"13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை முறைமைஇ இந்திய வீட்டுத்திட்டம், வாழ்வாதார உதவிகள், புகையிர பாதை புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு இந்திய காட்டி வரும் கரிசனைக்கு மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் நன்றிகள் தெரிவித்தேன்.

இந்திய அரசாங்கம் எமது தமிழ் பேசும் மக்களுக்கு மென்மேலும் வாழ்வதார உதவிகள்இ இளைஞர் - யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகளை அமைத்தல்இ பிரதேசங்களின் உள்ளக வீதிகள் அமைத்தல்இ கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டிருந்தேன்.

மேலும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எமது நாட்டில் நடைபெற போகும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்பதுடன் அவர் வட மாகாணத்திற்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு நிலைமைகளை பார்வையிட்டு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய தீவிர அக்கறை காட்ட வேண்டுமென வலியுறுத்தியதாக" அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .