2025 ஜூன் 23, திங்கட்கிழமை

லண்டனில் பொறியியலாளராக மகன்; பார்க்க துடிக்கும் முதியோர் இல்லத்திலுள்ள தாய்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் லண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.

கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்கலாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்தவராவார்.

இவர் தொடர்பில் தகவலளித்த கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் கூறியதாவது, 'குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது.

கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது அவர் லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார். இந்நிலையில், இவர் ஓரளவு மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பி தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார்.

தற்போது அவர் தனது மகனை தேடுவதாகவும் மகன் தன்னை வந்து பார்ப்பாரா? என குறித்த தாய் பாசம் மேலிட்ட நிலையில் ஏங்கி அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறும் எம்மிடம் கோருகின்றார்.

இதனால், கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் தாயைப் பார்ப்பதற்காக அவரது மகன் எங்கு இருந்தாலும் இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று முதியோர் இல்ல அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Sega Siva Thursday, 07 November 2013 03:05 PM

    ஒரு விதவைத் தாயின் நியாயபூர்வமான வேண்டுகோள். நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் தாயையும், மகனையும் சந்திப்பதற்கு வழி சமைக்க வேண்டும்.

    Reply : 0       0

    Sega Siva Thursday, 07 November 2013 03:06 PM

    நியாயமான வேண்டுகோள். சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும்.

    Reply : 0       0

    rajmokan Friday, 08 November 2013 04:19 PM

    அம்மா என்னும் வார்த்தை தான் அர்தம் சொல்கிற வாக்கியம் எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேட்கும் பாக்கியம்.

    Reply : 0       0

    aruran Monday, 11 November 2013 11:04 AM

    உங்கள் எண்ணங்கள், ஆதரவுக் கரங்கள் இருக்கும் வரை எங்கள் பயணம் தொடரும். இவ்விடயம் தொடரபான மேலதிக தகவல்களுக்கு statehomenp@gmail.com 0212057040 அல்லது 0775723474 தொடர்பு கொள்ளுங்கள். தாயை மகனோடு சேர்த்து கனவு மெய்ப்பட உழைப்போம் வாருங்கள் உறவுகளே.
    சாந்தி நிலையம் (அரச முதியோர் இல்லம்)
    கைதடி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .