2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புத்தூரில் இரு இடங்களில் திருட்டு: பொலிஸில் முறைப்பாடு

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


செல்வநாயகம் கபிலன்


யாழ்.புத்தூர் இராசவீதியிலுள்ள கடையொன்றில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் அப்பிரதேசத்திலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 40 ஆயிரம் பெறுமதியான பொருட்களும் வியாழக்கிழமை இரவு (07) திருடப்பட்டுள்ளன.

கடையின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த மின்சாரப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பால்மாக்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியுள்ளனர்.

அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த குத்து விளக்குகள், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட பித்தளைப் பொருட்களையும் திருடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளராலும், ஆலயத்தின் நிர்வாகத்தினராலும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கடைகள், வீடுகளில்; மற்றும் ஆலயங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான திருட்டுக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .