2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் கத்திக்குத்து; தாயும் மகளும் காயம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரு பெண்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவிட்டபுரம், சாயோடையில் நேற்றிரவு (12) நடைபெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த இரத்தினம் செல்வநாயகி (53) மற்றும் அவருடைய மகள் இரத்தினம் சுகந்தினி (33) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இருவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • praveen Wednesday, 13 November 2013 11:20 AM

    திருந்தவேமாட்டார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .