2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வட மாகாண மீனவர்களுக்கு நிலையான மூலதன முதலீட்டுத் திட்டம் அறிமுகம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செ
ல்வநாயகம் கபிலன்

வட மாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியத் திட்டம் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக அடுத்த வருடம் முதல் நிலையான மூலதன முதலீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வடபகுதி மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தும் 2013ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களும் பின்னர் செப்டெம்பர் மாதம் மட்டுமே எரிபொருள் மானியம் வழங்கப்பட்டது.

ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக நிலையான மூலதன முதலீட்டுத் திட்டம் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இதற்கமைய நவீன கடற்றொழில்; உபகரணங்கள், G.P.S உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள், வலிச்சல் வலைகள் போன்றவை வருடம் ஒருமுறை மீனவர்களுக்கு கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, வெளியிணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட பாரம்பரிய படகுகள் மற்றும் வெளியிணைப்பு பூட்டப்பட்ட படகுகளுக்கு ஒரு லட்சத்து 12,500 ரூபா பெறுமதியான உபகரணங்களும்,  ஒருநாள் மீன்பிடியில் ஈடுபடும் கலன்களுக்கு 2 இலட்சத்து 30,400 ரூபா பெறுமதியான உபகரணங்களும், பலநாள் கடலில் தரித்து நின்று தொழில் செய்யும் கலன்களுக்கு 3 இலட்சத்து 74,400 ரூபா பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

வடபகுதியினைச் சேர்ந்த மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இத்திட்டத்திற்காக தங்கள் பதிவுகளை தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .