2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வீடுகளை விரைவில் நிர்மாணிக்குமாறு வேண்டுகோள்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் வீடுகளை மிக விரைவில் நிர்மாணிக்குமாறு வீட்டுதிட்ட திட்டமிடல் பொறியியலாளருக்கு கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வளலாய் கிழக்கு பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை இன்று வியாழக்கிழமை (14) சென்று பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பிரதேச செயலர் மேலும் தெரிவிக்கையில், 'இந்திய நிதியுதவி கீழ் 93 வீடுகள் அமைப்பதற்கு இவ்வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி சிபாரிசு செய்யப்பட்டது. இதில் 92 வீடுகளின் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மற்றைய ஒரு வீடு அமைக்கப்படவிருந்த காணியில் கண்ணிவெடி இருந்தமையினால் இதுவரையிலும் கட்டிட வேலைகள் தொடங்கப்படாமல் இருக்கின்றது.

இத்திட்டத்தில் ஒரு வீடு அமைப்பதற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என்ற வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமூர்த்தி உத்தியோகத்தர் இராமராஜன் மயூரன், வீட்டுதிட்ட திட்டமிடல் பொறியியலாளர் வல்லிரபுரநாதன் கணேசநாதன் ஆகியோரும் உடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .