2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ்.போராட்டத்தை நிறுத்த மனு: நீதிபதி நிராகரிப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 15 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்றுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக யாழ். பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பே. சிவகுமாரனால் நிராகரிக்கப்பட்டது.

பிரிட்டிஷ; பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு நல்லூர் பகுதியில் இடம்பெற்று வரும் காணாமல் போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு அனுமதி கோரி பொலிஸாரால்  நீதிமன்றத்தில் சமர்;ப்பிக்கப்பட்ட மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி போராட்டத்தின் நிலைமையினை சட்டத்தரணி வி.கி. சிவலிங்கம் நீதிமன்றுக்கு எடுத்துரைத்தார்.

மக்கள் தங்களின் பிரச்சனைகளை வெளிக்கொணரும் வகையிலேயே இவ்வாறான போராட்டத்தினை மேற்கொள்கின்றனரே தவிர வேறு எந்தவொரு செயற்பாடுகளையும் குழப்புவதற்காக அல்ல என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,  நீதிபதியினால் மேற்படி மனு நிராகரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .