2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் திருட்டு

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


கோப்பாய் பூதர்மடச் சந்தியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் 18 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்றிரவு சனிக்கிழமை (16) திருடப்பட்டுள்ளன.

மேற்படி நிலையத்தின் உரிமையாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலையத்தினைத் திறப்பதற்காக சென்ற வேளையில், நிலையத்தின் முன் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்துவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரச் சாவிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப் போயுள்ளமை தெரியவந்தது.

இது தொடர்பாக நிலையத்தின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .