2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கூட்டுறவு பல்பொருள் வாணிப நிலையத்தில் திருட்டு: ஒருவர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். உருப்பிராய் சந்தியிலுள்ள கூட்டுறவு பல்பொருள் வாணிப நிலையத்தில் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திங்கட்கிழமை (18) இரவு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி வாணிப நிலையத்தின் முகாமையாளர் செவ்வாய்க்கிழமை (19) காலை நிலையத்தினை திறப்பதற்காகச் சென்றிருந்தபோது, நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பால்மா வகைகள், சவர்க்காரம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருட்டுப்போயுள்ளமையை அறிந்துகொண்டுள்ளார். தெரியவந்தது.

பின்னர் இது தொடர்பில்; கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .