2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுத்தீவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல் நடல்

Super User   / 2013 நவம்பர் 19 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ். சிறுத்தீவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பாரம்பரிய சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இதற்கான அடிக்கல்லினை நட்டனர்.

வேலணைப் பிரதேச செயலகத்திற்குள் அமைந்துள்ள இந்த சிறு தீவினை இலங்கையினைச் சேர்ந்த பிரித்தானிய தொழிலதிபர் ஒருவர் 33 வருடகால குத்தகை ஒப்பந்தம் அடிப்படையில் பெற்றுள்ளார்.

130 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த தீவில்  52 அறைகள், நீச்சல் தடாகங்கள், தனித்தனியான 11 ஆடம்பர வீடுகள் உள்ளடங்கலான ஐந்து நட்சத்திரக் ஹோட்டலொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்படவுள்ளதாக குறித்த தொழிலதிபர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .