2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

லங்கா சீமெந்து பணியாளர்களுக்கான கொடுப்பனவு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


லங்கா சீமெந்து கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த 57 பணியாளர்களுக்கு முதல் கட்டமான 3.1 மில்லியன் ரூபா கொடுப்பனவு இன்று வெள்ளிக்கிழமை (29) வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் மேற்படி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கினார்.

1990ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கேசன்துறை லங்கா சீமெந்து கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றி யுத்தத்தினால் கடமையிலிருந்து விலகிய 57 பணியாளர்களுக்கு முதல் கட்டமாக 60 வீதக் கொடுப்பனவாக 3.1 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டமாக 40 வீதக் கொடுப்பனவும் வழங்கப்படும் என பிரதித் தொழில் ஆணையாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .