2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்தத்தினால் கணவனை  இழந்த பெண்ணொருவருக்கு சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய வீடொன்றினை  இராணுவத்தினர்; நிர்மாணித்துகொடுத்துள்ளனர்.

குறித்த பெண் யுத்தத்தினால் கணவனை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் இவரது நிலைமையை கருத்தில்கொண்டு இராணுவத்தினரால் வீடு ஒன்றினை நிர்மாணித்துகொடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, மாவட்ட வள்ளிபுனம் கிராமமட்ட அமைப்பின் பிரதிநிதியான ஐ.மாதவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி எல்.பி.ஆர்.மார்க்கினால்; கலந்துகொண்டு குறித்த பெண்ணிற்கு வீட்டினை உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில் கொரிய நாட்டு பிரதிநிதியான சொன்கிங்கொண், மாகாண சபை உறுப்பினர் வீ.கனகசுந்தரசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இப்பகுதியில் இன்னுமொரு பயனாளிக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .