2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜப்பான் யுனிசெவ் நிறுவன ஆலோசகர் சுயதொழில் பயனாளிகளை சந்திப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த ஜப்பான் யுனிசெவ் நிறுவன ஆலோசகர் மாசா, சுயதொழில் பயனாளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவர் விஜயம் மேற்கொண்டார்.

யுனிசெவ் நிறுவனம் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ள வறிய குடும்பங்களுக்கு 30 ஆயிரம் ரூபா முதல்  40 ஆயிரம் ரூபா வரையிலான சுயதொழில் நன்கொடைகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களினூடாக 82 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சுயதொழில்
உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

பாடசாலை செல்லும் மாணவர்களைக்  கொண்ட  வறிய குடும்பங்களின்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி  அவர்களின் கல்வி மட்டத்தை
உயர்த்துவதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜப்பான் யுனிசெவ் நிறுவன ஆலோசகர் மாசா தனது கிளிநொச்சி விஜயத்தின்போது சுயதொழில் பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன்  அவர்களது செயற்திட்டங்களையும் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .